கள்ளக்குறிச்சி மாவட்டம் வடமருதூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 56 வயதான பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சமீபகாலமாக கொரோனா எந்த அளவிற்கு உயர்கிறதோ, அதேபோல், அடிக்கடி கொரோனா மரணமும் நிகழ்கிறது. ஆனால், அரசு கொரோனாவின் வீரியம் குறைவாக இருப்பதாக கூறுகிறது.