திருச்சி மாவட்டத்தில் உள்ள முதுவத்தூர் திருவள்ளுவர் நகரில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். வியாபாரியான நாகராஜுக்கு ராஜேந்திரன் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நாகராஜுக்கும் ராஜேந்திரனின் மனைவி கலைச்செல்விக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து கலைச்செல்வி நாகராஜுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

ஆனால் நாகராஜ் தொடர்ந்து தொந்தரவு அளித்தார். ஒரு கட்டத்தில் நாகராஜ் கோபத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு கலைச்செல்வியை கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நாகராஜை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்து திருச்சி மகளிர் நீதிமன்றம் நாகராஜுக்கு ஆயுள் தண்டனையும், 15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.