கரூர் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதன் பேட்டையில் சீனிவாசன்(42) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 4 மற்றும் 6 வயது சிறுமிகளை ஏமாற்றி சீனிவாசன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமிகளின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கினை விசாரித்த கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் சீனிவாசனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.