திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அண்ணா நகரில் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜீவா அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் ஜீவாவை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகிலா நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜீவாவுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.