கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்காமண்டபம் சீயோன் மலை தெற்கு கைலாசவிளை பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் ரவியின் மகன் இன்ஜினியரிங் கல்லூரியில் 4- ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் அதிக நேரம் விளையாடிக் கொண்டிருந்த தனது மகனை ரவி கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறு மன உளைச்சலில் மாணவன் விஷம் குடித்த மயங்கி விழுந்தார்.

அவரை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகன் விஷம் குடித்ததால் மன உளைச்சலில் இருந்த ரவியும் ரப்பர் பால் உறைய பயன்படுத்தும் திராவகத்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.