விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பாரைப்பட்டி பகுதியில் ராஜ்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் கிடைத்த வேலைகளை பார்த்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து ராஜ் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் சுந்தரராஜபுரத்தில் இருக்கும் பட்டாசு கடையின் வெளியே ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.