காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது. இதனை கண்டித்து நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்திய போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீதிபதியின் நாக்கு வெட்டப்படும் என்று கூறினர்.

இதற்கு தற்போது பாஜக கட்சியின் நிர்வாகி குஷ்பூ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, காங்கிரஸ் கட்சிக்கு என்ன ஆயிற்று பாருங்கள். பதவிக்கு வந்ததும் பதவியில் இருக்கும் நீதிபதியின் நாக்கை அறுப்போம் என்று காங்கிரஸ்காரர்கள் மிரட்டுகிறார்கள். அவர்கள் ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள். காங்கிரஸ் காரர்கள் பெரிய நயவஞ்சகர்கள் என்று விமர்சித்துள்ளார்.