சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான மாவட்டச் செயலாளர்கள்,  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,  பல்வேறு செய்திகளை, கருத்துக்களை,  பரிமாற்றங்களை நாங்கள் செய்திருக்கிறோம்.

எதிர்வரும் தேர்தலை எதிர்நோக்குகின்ற நாம் என்னென்ன பணிகளை  செய்ய வேண்டும், என்னென்ன கடமைகளை ஆற்ற வேண்டும் என ஆலோசித்தோம். முதலாவதாக அடுத்த மாநாடு எங்கு நடத்தப்பட வேண்டும் ? என்ற எல்லோ விஷயங்களை கலந்து பேசி, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்து பேசி உள்ளோம். வருகின்ற 2024 ஜனவரி 6ஆம் தேதி கோவை மாநகரில் அடுத்த மாநாடு நடத்தப்படும் என முடிவெடுத்தோம் என ஓபிஎஸ் தெரிவித்தார்.