இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக். இவர் தற்போது தன்னுடைய முன்னாள் ஐபிஎல் போட்டி அனுபவம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். இது குறித்து சேவாக் கூறியதாவது, ஜகீர் கான், நெஹ்ரா, ஹர்பஜன் சிங் ஆகியோர் என்னுடைய நெருங்கிய நண்பர்கள்.

நாங்கள் ஐபிஎல் போட்டிக்கான நெட் பிராக்டீசின் போது மைதானத்துக்கு வா உன்னை அடிச்சி ஓட விடுறேன் என விளையாட்டாக பேசிக்கொள்வோம். மேலும் ஐபிஎல் தொடக்க காலத்தில் சொந்த அணி வீரர்களுக்கு எதிராக விளையாடுவது மாறுபட்ட உணர்வாக இருந்தது என்று கூறியுள்ளார்.