கன்னியாகுமரி-கேரளா எல்லையான படந்தாலு மூட்டி பகுதியில் இருக்கும் தனியார் நர்சிங் கல்லூரியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கிருக்கும் விடுதியில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமித்ரன் என்பவர் தங்கி படித்து வருகிறார். கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டு கல்லூரிக்கு வந்த சுமித்ரன் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் சுமந்திரன் விடுதியில் மேல்மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுமித்திரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சுமித்திரன் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் “என்னால் பெற்றோருக்கு நல்ல பிள்ளையாக இருக்க முடியவில்லை. நன்றாக படிக்கவும் இயலவில்லை. இந்த உலகில் நான் பிறந்ததை பாவமாக கருதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என எழுதியுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.