கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குடிமேன அள்ளி பகுதியில் ரங்கப்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட கோவிந்தம்மாள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த கோவிந்தம்மாள் பகுதியில் இருக்கும் அரசு பள்ளி அருகே விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தம்மாளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.