சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டி பணிமனை குட்டை பகுதியில் உதயமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கேசவர்த்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இனியா ஸ்ரீ என்ற மகளும், சஷ்வந்த் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் இனியா ஸ்ரீ தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று கல்லூரிக்கு செல்வதற்காக குளித்துவிட்டு இனியா ஸ்ரீ வீட்டில் மேல் மாடிக்கு சென்றுள்ளார்.

அங்கு மயங்கி விழுந்ததால் இனியா ஸ்ரீயின் பின் தலையில் அடிபட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இனியா ஸ்ரீயை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இனியா ஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.