திருச்சி மாவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தென்னூர் உழவர் சந்தை, வயலூர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி நடைபெறுகிறது.

இதனை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கியுள்ளார். அப்போது மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், நகர் நல அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். நேற்று ஒரே நாளில் 120.68 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.