தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் டெங்கு, மலேரியா, கொரோனாவை போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கருத்து கூறியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்து இருந்தது. உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்தால் அவரின் தலைக்கு விலை வைப்பதாக உத்திர பிரதேச சாமியார் பேசியிருந்தார்.

இதுவும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ”சனாதனம்” குறித்து பேசுபவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரக்களிடம் சொன்னதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின

இதனிடையே உதயநிதி ஸ்டாலின் மீது நாடு முழுவதும் பல பகுதியில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, தனது ட்விட்டர் X  பக்கத்தில்,  தமிழக முதல்வரின் மனைவி திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்கள் கோவில் கோவிலாக செல்லும் இந்து சனாதனி ஆவார். அவர் மலேரியாவா. அவ்லது டெங்குவா அதை முதல்ல சொல்லு என்று ட்விட் போட்டு உள்ளார்.