திமுக தலைவர் ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட இ.வி.கே எஸ் இளங்கோவனை வெற்றி பெற செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமானது நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான அணிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லிக்கு சென்று குடியரசுத் தலைவரை சந்தித்தார். அவர் உட்கட்சி பிரச்சினையை தீர்த்து வைக்க செல்லவில்லை.

திமுக ஆட்சியில் சென்னையில் கட்டப்பட்ட பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பதற்கு குடியரசு தலைவரை அழைக்கச் சென்றார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகளும் டெல்லிக்கு சென்றார்கள். அவர்கள் மக்கள் பிரச்சனைக்காக செல்லவில்லை. அவர்களுடைய கட்சி பிரச்சினையாக சென்றார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர் என்ற நிலை உள்ளது என்று கூறினார்.