அம்மா உணவகத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக சேலம் உணவக பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர். சேலம் மாநகரில் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்கவில்லை என்றால் பணி புறக்கணிப்பில் ஈடுபட போவதாக மிரட்டி வருகின்றனர். இதனால் மளிகை பொருட்கள் விநியோகிக்கபடவில்லை என கூறப்படுகின்றது. மாவட்ட ஆட்சியரை சந்தித்த பணியாளர்கள் மளிகை பொருள் விநியோகம் அம்மா உணவகத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளதாக மனு அளித்துள்ளனர்.