தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்றும் மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் கணித்திருக்கிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்து இருக்கிறது.

மேலும் மீனவர்களுக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இன்றைய தினம் வடக்கு கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள  இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும்,  இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும்  காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு இன்றைய தினம் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் இருக்கிறது தெரிவித்துள்ளது.