கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெங்கஞ்சி இடகண்டம் விளை பகுதியில் வில்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். நேற்று மாலை சசிகலா வீட்டிற்கு பின்புறம் கோழிகளுக்கு தீவனம் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது கருப்பு துணியால் முகத்தை மூடியபடி வந்த மர்ம நபர் சசிகலாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவர் அணிந்திருந்த 4 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

அப்போது சசிகலாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து சென்றார். இதுகுறித்து சசிகலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.