இந்தியாவில் வருடத்திற்கு இரண்டு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் நிலையில் சமீபத்தில் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. இந்நிலையில் அடுத்த அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு இந்த மாதத்தின் இறுதிக்குள் வெளியாகும் என்று தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு மே 31-ம் தேதிக்குள் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தெலுங்கானா மற்றும் திரிபுரா ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த தேர்தலை முன்னிட்டு பாஜக அரசு அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.