மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டதால் தற்போது 42 சதவீத அகவிலைப்படியை ஊழியர்கள் வாங்கி வருகிறார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி எவ்வளவு உயரும் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அதன்படி 4 சதவீதம் வரை அகவிலைப் படி உயர்த்தப்படலாம் என நுகர்வோர் விலை குறியீடு கணித்துள்ளது. 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் 46 சதவீத அகவிலை படியை ஊழியர்கள் பெறுவார்கள். மேலும் இந்த அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு மே 31-ஆம் தேதி வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.