டெல்லி மெட்ரோவில் தினமும் ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக ராஜீவ் சௌக் போன்ற பரபரப்பான நிலையங்களில் ரயில் வரும்போதும், பயணிகள் ஏறி இறங்கும்போதும் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இந்த நெரிசலை பயன்படுத்தி சிலர் பயணிகளின் உடைமைகளை குறிவைப்பதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கூட்டத்தில் சிக்கியிருக்கும் நேரத்தில் தங்களது பைகள் மற்றும் மதிப்புமிக்க பொருள்களை பயணிகள் கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையையும் இந்த வீடியோ ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகி வரும் அந்தக் காணொலியில், மஞ்சள் நிற சேலை அணிந்த பெண் ஒருவர் மெட்ரோ ரயிலில் ஏற முயலும் மற்றொரு பெண்ணின் பையை நோக்கி கை நீட்டுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த நேரத்தில் சுற்றிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது. பையில் இருந்து ஏதாவது பொருளை எடுக்க முயன்றதாகக் கூறப்படும் அந்தப் பெண்ணின் நடவடிக்கை கேமராவில் பதிவாகியுள்ளது. திடீரென கேமரா இருப்பதை கவனித்ததும், அவர் உடனடியாக கையை வெளியே எடுத்துக்கொண்டு எதுவும் நடக்காதது போல நடந்துகொள்வதும் காட்சியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில்  பகிர்ந்துள்ள. வீடியோ வெளியானது சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். கூட்ட நெரிசல் இருக்கும் இடங்களில் பயணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், தங்களது கைப்பைகள், பணப்பைகள் மற்றும் பிற பொருள்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில், சமூக வலைதளங்களில் வெளியாகும் ஒரு வீடியோவை மட்டும் வைத்து சம்பவம் குறித்த முழுமையான முடிவுக்கு வரக்கூடாது என்றும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி மெட்ரோ போன்ற அதிக கூட்டம் காணப்படும் பொது போக்குவரத்து இடங்களில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்ந்து முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வைரல் வீடியோவும் கூட்ட நெரிசலில் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்பதை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. குறிப்பாக ரயிலில் ஏறும் மற்றும் இறங்கும் நேரங்களில் தங்களது உடைமைகளை அருகில் வைத்துக் கொள்வதும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தெரிந்தால் பாதுகாப்பு பணியாளர்களிடம் உடனடியாகத் தெரிவிப்பதும் அவசியம். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது.