தமிழகத்தில் தற்போது மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் மோசடியில் செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய நண்பர்கள் ஆன தேவ சகாயம், அன்னராஜ், சகாய ராஜன், பிரபு ஆகியோர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அதன் அடிப்படையில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை விசாரித்து வரும் மத்திய குற்றபிரிவு காவல் துறையினருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.