கோவை மாவட்டம் மதுக்கரை போடிபாளையம் அருகில் சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரளாவில் இருந்து வந்த கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 மாத கைக்குழந்தை காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டது. இதனால் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கார் விபத்தில் 6 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.