சென்னை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சை பிரிவு கட்டிட நுழைவாயில் அருகில் மின் ஒயர்கள் வெடித்து சிதறியது. இவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.