நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதை தொடர்ந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்கள் தொடர்பான பல்வேறு விதமான அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சிகரெட்டுகள் மீதான சுங்க வரி அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதோடு புகையிலை மீதான வரி 16 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.