கரூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகள் திடீரென மாயமாகினர். இவர்களை அக்கம் பக்கத்தில் தேடிவிட்டு பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடு்த்து மாணவிகளை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இந்நிலையில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மூன்று மாணவிகளும் மீட்கப்பட்டுள்ளனர்.

பிரபல தென்கொரியா இசைக்குழுவான BTSஐ பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தான் மூன்று மாணவிகளும் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு ரயில் மூலமாக காட்பாடி சென்றுள்ளனர். இந்த நிலையில் தான் மாணவிகளை தேடி வந்த தனிப்படை போலீசார் காட்பாடியில் வைத்து மாணவிகளை மீட்டு உள்ளனர்.