நீலகிரி மாவட்டம் அய்யன்கொல்லி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பேருந்தை கைகாட்டி நிறுத்திய போதும் ஓட்டுனர் பன்னீர் நிறுத்தாமல் சென்றுள்ளார். இது குறித்து அந்த பெண் ஓட்டுனரிடம் கேட்டபோது இது என்ன உன் அப்பன் வீட்டு வண்டியா? என அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் ஓட்டுனருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஓட்டுனர் பன்னீர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.