சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் சைதன்யா இவர் விமானப்படையில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது எட்டு வயது மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். ஆனால் சைதன்யா காப்பாற்றப்பட்டு விட்டார்.

அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது ஆன்லைன் சூதாட்டத்தின் மூலமாக தனக்கு 50 லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டதாகவும் அதனால்தான் இத்தகைய முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.