புத்தாண்டுக்கு பின் BSNL நிறுவனமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறது. அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL மலிவான விலையில் வழங்கி வந்த சில ப்ராட்பேண்டு திட்டங்களை நிறுத்தி இருக்கிறது.

அந்த அடிப்படையில் BSNL நிறுவனமானது தன் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய்.275 மற்றும் ரூ.775 விலையில் வழங்கி வந்த ப்ராட்பேண்டு திட்டங்களை நிறுத்தி இருக்கிறது. டெலிகாம் டாக் அறிக்கையின் அடிப்படையில், BSNL நிறுத்தியிருக்கும் இந்த ரீசார்ஜ் திட்டங்கள் ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.