இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமூகமான  சூழல் எப்போதும் தொடர்ந்தது இல்லை. இவ்வாறான சூழலில் இந்திய பாதுகாப்பு படையிலிருந்து ஒருவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வருபவர் நிலேஷ் வல்ஜிபாய்.

இவர் கடந்த ஜூன் மாதம் வரை பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு whatsapp மூலமாக பூஜ் பகுதியில் நடக்கும் கட்டுமான பணிகள் பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளார். இது அதிகாரிகளுக்கு தெரிய வந்ததையடுத்து பயங்கரவாத ஒழிப்பு படையினர் நிலேஷ் வல்ஜிபாயை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.