பாஜகவை விட்டு விலகியதற்கான தண்டனையை இபிஎஸ் அனுபவிப்பார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்கள் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் டிடிவி தினகரன்,  பாஜக உதவியால் தான் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடத்தினார். பாஜகவை விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிச்சாமி யாரோடு மெகா கூட்டணி அமைக்க போகிறார்.  அதிமுக வருங்காலத்தில் நெல்லிக்காய் மூட்டை போல சிதற போகிறது என்று டிடிவி விமர்சனம் செய்தார்.