நாடாளுமன்ற சிறப்பு கூத்தொடர் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் செப்டம்பர் 22ஆம் தேதி வரை  நடைபெற உள்ளது.சிறப்புக் கூட்டத் தொடர்கான காரணத்தை கூற வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்திய நிலையில் தற்போது அதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சம்விதான் சபா தொடங்கி பிற சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள், பாடங்கள் ஆகியவற்றை பகிரலாம் என அறிக்கை வெளியாகி உள்ளது. நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் குறித்து அனுபவத்தை பகிர்வதற்காக சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் வரலாறு குறித்தும்,  தங்களது கருத்துக்களை எம்பிக்கள் பகிரலாம் எனவும் அறிக்கையில் தகவல்.