திமுக அமைச்சர்களுக்கு எதிரான சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.திமுக  அமைச்சர்கள் ரகுபதி, கே.என் நேரு,  ஐ.பெரியசாமி மீதான வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்த வழக்குகள் அதிமுக ஆட்சி காலத்தில் 2015 ஆம் ஆண்டு போடப்பட்டிருந்த நிலையில்,  தற்போது இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கின்றன. இதனால் அதிமுகவுக்கு பெரிய பின்னடைவு என DMK IT விங் பிரிவினர் சமூக ஊடகத்தில் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.