தமிழகத்தைப் பொறுத்தவரை மதுரை, திருச்சி மற்றும் சென்னையில் மட்டும் ஏர்போர்ட் இருக்கும் நிலையில் தற்போது புதிதாக தஞ்சாவூரிலும் புதிய ஏர்போர்ட்டை இந்தியன் ஏர்போர்ட் அத்தாரிட்டி அமைப்பு அமைக்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 200 கோடி செலவில் பிரமாண்டமாக புதிய உள்நாட்டு நிலையத்தை உருவாக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

மிக கூடிய விரைவில் விமான நிலையம் அமைப்பதற்கு பணிகள் தொடங்கும் எனவும் தஞ்சாவூர் விமானப்படைத்தளம் அருகே விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் உடைய எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.