முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்தக்குவிப்பு வழக்கில், ஓ.பன்னீர்செல்வம், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலிருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயா்நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் முதல் வழக்காக விசாரணைக்கு வந்தது. இதில், ஆட்சியாளர்களின் விருப்பப்படி லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறது. குற்ற வழக்கு விசாரணை கேலிக்கூத்து ஆக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அரசில் இருந்து விலகி தனித்துவமாக செயல்பட வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டார்.