உதகை சாம்ராஜ் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய 34 மாணவர்களின் கணிதப் பாட முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு எழுதும்போது ஆசிரியர்கள் உதவியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களின் விடைத் தாள் அனைத்தும் தேர்வுத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.