சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு திட்டத்தில் 371 கோடி ரூபாய் அரசுக்கு முறைகேடு ஏற்படுத்தியதான புகாரில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு,  பத்து மணி நேரம் விசாரணைக்கு பிறகு இரண்டு வாரங்கள் குறிப்பாக..  14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு தரப்பு இரண்டு மனுக்கள் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் ஒன்று உடல் நிலையை காரணம் காட்டி பிணை கேட்கப்பட்டிருக்கிறது. இன்னொரு தான் எங்கும் வெளியில் செல்ல மாட்டேன். வீட்டிலேயே இருப்பேன் என்று அவர் கூறி பிணை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.