ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை செப். 20க்குள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. செப்.15ம் தேதி மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் தொடங்கிவைத்த 5 நாட்களுக்குள் (20ம் தேதி) அனைவருக்கும் ரூ.1000 வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதனால், வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு நாளை முதல் புதிய கணக்கை தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.