சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் 2 நாட்களுக்கு முன்பு, ராஜேஸ்வரி என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தகாத உறவால் தங்கை நாகவள்ளி சிறைக்கு செல்ல ராஜேஸ்வரி காரணமாக இருந்ததாகவும், இதனால், ராஜேஸ்வரியை அவரது தங்கை நாகவள்ளியே கூலிப்படை ஏவி கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.