வங்காளதேசம் சத்திரகாண்டா பகுதியில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 35 பேர் உ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது