தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று 6 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இதை மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சை, காஞ்சி, திருவண்ணாமலை, திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும். அதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.