திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை சந்திக்க நான் தயார் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் தொடர்பாக நடைபெற்ற ஊழல் குறித்து அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் என் மீதும், பாஜக மீதும் தெரிவித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு R.S.பாரதி விளக்கமளிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது வழக்குத் தொடுக்கப்படும் என பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.