அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் அண்ணாமலை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஏன் அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இப்படி பேசி பேசி தான் அவர் பெரிய ஆளாகிறார். அவர் பேட்டி கொடுத்தே பெரிய ஆளா மாறனும்னு நினைக்கிறாரு. அரசியலில் இருப்பவர்களுக்கு அதன் தன்மை குறித்து தெரிய வேண்டும். முதிர்ந்த அரசியல்வாதிகளை பற்றி கேளுங்கள் நான் சொல்கிறேன் என்று கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமி நேரடியாகவே அண்ணாமலையை விமர்சித்ததால் தற்போது மீண்டும் அதிமுக மற்றும் பாஜக இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக கட்சியின் விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி எடப்பாடி பழனிச்சாமி பேசியதற்கு பதிலடி கொடுத்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்களுடைய தலைவர் புது இலக்கணம். அடுத்தவர் காலில் விழுந்து பதவி பெற்றுவிட்டு  கொடுத்தவர் காலையே வாருபவர்களுக்கு இந்த புது இலக்கணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என பதிவிட்டுள்ளார். மேலும் இதன்மூலம் தற்போது அதிமுக பாஜக கூட்டணியில் மீண்டும் விரிசல் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.