தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் புதிய காலணி உற்பத்தி ஆலை அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக தமிழக அரசு தற்போது தைவான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது.