தமிழ்நாட்டில் இன்று 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.66 சதவீதம் மாணவிகளும், 88.16 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோன்று 11-ஆம் வகுப்பு பொது தேர்வில் 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது 10 மற்றும் 11-ஆம் வகுப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி 10 மற்றும் 11-ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு மே 23-ஆம் தேதியும், மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு மே 24 முதல் 27-ஆம் தேதி வரையும் விண்ணப்பிக்கலாம். மேலும் தற்காலிக மதிப்பெண் பட்டியலை மே 26-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.