மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இரண்டு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இருப்பதாக தேமுதிக தலைமை அலுவலகம் இன்று காலை அறிக்கையின்மூலம் தெரிவித்தது. இந்நிலையில் சற்றுமுன் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட உடனே அவரது உடல் சாலிகிராமம் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது