பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானேஷ்குமார் மற்றும் எஸ் எஸ் சாந்து ஆகியோர் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது காஷ்மீரை நிர்வகித்த அதிகாரிகளில் ஞானேஷ்குமாரும் ஒருவர். ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் விரைவில் தேர்தல் தேதி வெளியாக உள்ளது..