மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000ஐ பயனாளிகள் வங்கிக் கணக்கில் செலுத்தும்பணி தொடங்கியுள்ளது. 1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பணிகள் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக நேற்று ரூ.1 செலுத்தும் சோதனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.1000 செலுத்தப்படுகிறது. தங்களின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 கிரெடிட் ஆனதையடுத்து, தமிழக அரசுக்கு நன்றி கூறி பலரும் ஷேர் செய்கின்றனர்.