தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இன்று மாணவர்களுக்கான ஆதார் அட்டை பதிவு முகாம் நடைபெறுகிறது. அனைத்து மாணவர்களும் ஆதார் கோரி விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, அரசு பள்ளியில் 6-12ம் வகுப்பு பயிலும் மாணவிகள் உயர்கல்வியில் சேரும்போது புதுமைப்பெண் திட்டம் மூலம் ₹1000, மாணவர்களுக்கு “தமிழ் புதல்வன் திட்டம்” மூலம் ₹1000 வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.