லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படத்தை ஏப். 24 வரை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஏப்.14ல் படம் வெளியாக இருந்தது. இந்நிலையில், படத்தின் டப்பிங் உரிமை பெற்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இந்தி டப்பிங் உரிமைக்காக தயாரிப்பு நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை மீறி, கூடுதல் பணம் கேட்டு ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்ததாக கூறியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏப்.24 வரை படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.